Recession, what recession.
This is just fabulous. For those who can read Tamil, you will enjoy this.
ஒரு வயதான பெரியவர் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்…அவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது…அதனால் அவர் செய்திதாள் எதுவும் படிப்பதில்லை…காது சரியாக கேட்காது என்பதால் வானொலி செய்திகளும் அவருக்கு எட்டாத ஒலி…
இருந்தாலும் உணவத்தொழில் அவருக்கு கைவந்த கலை…விதவிதமான உணவுகளை அறிமுகம் செய்து வியாபாரத்தை பலப்படுத்தி வந்தார்…பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மென்மேலும் வியாபாரம் பெருகியதால் மேலும் பல வேலையாட்களை சேர்த்து உணவகத்தின் இடத்தை விஸ்தரித்து, அந்தப்பகுதியின் சிறந்த உணவகமாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வந்தார்…
நாளாக நாளாக உணவகத்தில் கூட்டம் அலை மோதியதால் சமீபத்தில் பட்டபடிப்பை முடித்து வேலை தேடிவந்த தன் மகனையும் அதே உணவகத்தொழிலில் ஈடுபடச்செய்தார்…
மகனும் ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டான்…இருந்தாலும் உலகப்பொருளாதார சலனம் பற்றி செய்திகள் படிக்க படிக்க குழம்பியவனாக…அப்பாவிடம் வந்தான்…”அப்பா ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதை தாங்கள் அறிவீரா..?
“இல்லை மகனே அது என்ன பொருளாதார நெருக்கடி…?” இது அப்பா.
“உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து மிக மோசமான நிலையில் உள்ளது இங்கும் நிலை மிக மோசமான நிலை நோக்கி போய் கொண்டிருக்கிறது…அந்த மோசமான நிலையை சமாளிக்க நாம் தயாராக வேண்டும்” மகன்.
அப்பா யோசிக்க ஆரம்பித்தார்…மகன் பெரிய படிப்பெல்லாம் படித்தவன் உலக விசயங்களை செய்திதாள்,வானொலி, டெலிவிசன் மூலம் கரைத்து குடித்தவன் அவன் சொல்வதை லேசாக (சுலபமாக) எடுத்துக்கொள்ளக்கூடாது…
அடுத்த நாளிலிருந்து அதிரடி மாற்றங்கள்…
விதவிதமான உணவு அறிமுகங்களை நிறுத்தினார்.வித்தியாசம் கருதி அவர் கடை வந்த கூட்டமும் நின்றது…
புதிய திட்டங்களை புறந்தள்ளினார்…புதுமை கருதி வந்த கூட்டம் பூஜ்ஜியம் ஆனது.
ஆழம் தெரியாமல் ஆள்குறைப்பு செய்தார்…
திறமையான தொழிலாளர்கள் இடம் பெயர்ந்தார்கள்…உணவின் தரம் குறைந்தது…படிபடியாக தொழில் முற்றிலும் தடை பட்டது.
அப்பா மகனிடம் சொன்னார்…
“ மகனே நமக்கு இப்போது தொழில் அறவே இல்லை…நாம் இப்போது பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் சிக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.எது எப்படியோ நீ சொன்னது சரியாக போய் விட்டது.உன் யோசனை படி நடந்ததால் நாம் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பினோம்…என்ன வென்றாலும் படிச்சவன் படிச்சவன் தாண்டா..”
ஒரு வயதான பெரியவர் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்…அவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது…அதனால் அவர் செய்திதாள் எதுவும் படிப்பதில்லை…காது சரியாக கேட்காது என்பதால் வானொலி செய்திகளும் அவருக்கு எட்டாத ஒலி…
இருந்தாலும் உணவத்தொழில் அவருக்கு கைவந்த கலை…விதவிதமான உணவுகளை அறிமுகம் செய்து வியாபாரத்தை பலப்படுத்தி வந்தார்…பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மென்மேலும் வியாபாரம் பெருகியதால் மேலும் பல வேலையாட்களை சேர்த்து உணவகத்தின் இடத்தை விஸ்தரித்து, அந்தப்பகுதியின் சிறந்த உணவகமாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வந்தார்…
நாளாக நாளாக உணவகத்தில் கூட்டம் அலை மோதியதால் சமீபத்தில் பட்டபடிப்பை முடித்து வேலை தேடிவந்த தன் மகனையும் அதே உணவகத்தொழிலில் ஈடுபடச்செய்தார்…
மகனும் ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டான்…இருந்தாலும் உலகப்பொருளாதார சலனம் பற்றி செய்திகள் படிக்க படிக்க குழம்பியவனாக…அப்பாவிடம் வந்தான்…”அப்பா ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதை தாங்கள் அறிவீரா..?
“இல்லை மகனே அது என்ன பொருளாதார நெருக்கடி…?” இது அப்பா.
“உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து மிக மோசமான நிலையில் உள்ளது இங்கும் நிலை மிக மோசமான நிலை நோக்கி போய் கொண்டிருக்கிறது…அந்த மோசமான நிலையை சமாளிக்க நாம் தயாராக வேண்டும்” மகன்.
அப்பா யோசிக்க ஆரம்பித்தார்…மகன் பெரிய படிப்பெல்லாம் படித்தவன் உலக விசயங்களை செய்திதாள்,வானொலி, டெலிவிசன் மூலம் கரைத்து குடித்தவன் அவன் சொல்வதை லேசாக (சுலபமாக) எடுத்துக்கொள்ளக்கூடாது…
அடுத்த நாளிலிருந்து அதிரடி மாற்றங்கள்…
விதவிதமான உணவு அறிமுகங்களை நிறுத்தினார்.வித்தியாசம் கருதி அவர் கடை வந்த கூட்டமும் நின்றது…
புதிய திட்டங்களை புறந்தள்ளினார்…புதுமை கருதி வந்த கூட்டம் பூஜ்ஜியம் ஆனது.
ஆழம் தெரியாமல் ஆள்குறைப்பு செய்தார்…
திறமையான தொழிலாளர்கள் இடம் பெயர்ந்தார்கள்…உணவின் தரம் குறைந்தது…படிபடியாக தொழில் முற்றிலும் தடை பட்டது.
அப்பா மகனிடம் சொன்னார்…
“ மகனே நமக்கு இப்போது தொழில் அறவே இல்லை…நாம் இப்போது பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் சிக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.எது எப்படியோ நீ சொன்னது சரியாக போய் விட்டது.உன் யோசனை படி நடந்ததால் நாம் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பினோம்…என்ன வென்றாலும் படிச்சவன் படிச்சவன் தாண்டா..”
Comments
Post a Comment